/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வட்டாரத்தில் விட்டு, விட்டு சாரல் மழை: பொதுமக்கள் அவதி
/
கரூர் வட்டாரத்தில் விட்டு, விட்டு சாரல் மழை: பொதுமக்கள் அவதி
கரூர் வட்டாரத்தில் விட்டு, விட்டு சாரல் மழை: பொதுமக்கள் அவதி
கரூர் வட்டாரத்தில் விட்டு, விட்டு சாரல் மழை: பொதுமக்கள் அவதி
ADDED : நவ 30, 2024 01:00 AM
கரூர் வட்டாரத்தில் விட்டு, விட்டு
சாரல் மழை: பொதுமக்கள் அவதி
கரூர், நவ. 30-
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் நேற்று பெரும் அவதிப்பட்டனர்.
புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இருப்பினும், கரூர் மாவட்டத்திலும் கடந்த, சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது.
காலை, 9:30 மணி முதல், 10:30 மணி வரை கரூர் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.
இதனால், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.