sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை

/

தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை

தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை

தரம் உயர்ந்த குளித்தலை அரசு மருத்துவமனை


ADDED : ஜன 06, 2024 11:58 AM

Google News

ADDED : ஜன 06, 2024 11:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

குளித்தலை அரசு மருத்துவமனை கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசு இணையதளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, குளித்தலை என வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போதைய அரசு, குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனை என முறையாக சட்டசபையில் அறிவித்து அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில், குளித்தலை அரசு மருத்துவமனை, கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக செயல்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி, அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்தனர். இதை கண்டித்து, தி.மு.க., தவிர அனைத்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் இந்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்.

குளித்தலை அரசு மருத்துவமனை மீண்டும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம், அரசு மருத்துவமனைக்கு முறையாக மாவட்ட தலைமை மருத்துவமனை என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குளித்தலை என பெயர் பலகை டிஜிட்டல் முறையில் ஒட்டப்பட்டது. அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us