sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு காலனி பிரிவு சாலையில் உயர்கோபுர மின் விளக்கு தேவை

/

அரசு காலனி பிரிவு சாலையில் உயர்கோபுர மின் விளக்கு தேவை

அரசு காலனி பிரிவு சாலையில் உயர்கோபுர மின் விளக்கு தேவை

அரசு காலனி பிரிவு சாலையில் உயர்கோபுர மின் விளக்கு தேவை


ADDED : பிப் 04, 2024 11:14 AM

Google News

ADDED : பிப் 04, 2024 11:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் வாங்கல் சாலை அரசு காலனி பிரிவு அருகே, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கரூர், வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனி பிரிவு உள்ளது. கரூரில் இருந்து மின்னாம்பள்ளி, கோயம்பள்ளி, நெரூர், சோமூர், திருமுக்கூடலுார், வேடிச்சிபாளையம், கல்லுப்பாளையம் போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்கள், பஸ்கள் அரசு காலனி பிரிவை தாண்டி கிராம பகுதிகளை நோக்கி செல்கிறது. இந்த பிரிவு சாலையில் கரூரில் இருந்து வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார், சங்கரன்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் செல்கிறது.

அரசு காலனி பிரிவு அருகே, மூன்று வழிப்போக்குவரத்து நடந்து வருகிறது. இங்கு குடியிருப்புகளும், தனியார் பள்ளியும் செயல்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்லும் போது, போதிய வெளிச்சம் குறைவு காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்கின்றனர். இங்கு, உயர்கோபுர மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என, பல மாதங்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us