sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவிப்பு

/

பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவிப்பு

பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவிப்பு

பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவிப்பு


ADDED : நவ 29, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 29, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த கடவூர் வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம், காப்பீடு செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அறிவிப்பு செய்துள்ளனர்.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராத புயல், காற்று, மழை, இடி மற்றும் மின்னல் மூலம் பயிர்கள் சேதமடைகிறது. அத்தகைய காலக்கட்டங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து வாழ்வாதாரத்தையும், பொருளாதார இலக்கையும் பாதுகாக்க, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம்.

கடவூர் வட்டாரத்தில், இந்த திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களான மரவள்ளி கிழங்கு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றுக்கு மைலம்பட்டி, பாலவிடுதி குறு வட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும், குத்தகை விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்

பெறலாம்.

மேலும் விரிவான விபரங்களுக்கு, தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். பயிர் காப்பீடு செய்யும் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு ஜன.,31க்குள்ளும், மரவள்ளி கிழங்கு பிப்., 28க்குள்ளும், ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us