ADDED : மே 10, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, கணவனை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், சங்கரப்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் பாஸ்கர், 28; திருமணமானவர்.
இந்நிலையில் கடந்த, 29ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மனைவி முத்து லட்சுமி, 23, போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.