sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈரோட்டில் 5 இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

/

ஈரோட்டில் 5 இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

ஈரோட்டில் 5 இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

ஈரோட்டில் 5 இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை


ADDED : ஜன 09, 2025 07:57 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், இரு கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட ஐந்து இடங்களில், வருமான வரித்துறையினர் இரண்டாம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு, செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பாங்க் நகரில் என்.ஆர். குரூப்ஸ்சின் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி (பி) லிமிடெட் தலைமையகம் உள்ளது. தனியார், அரசு கட்டுமா-னங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து பணிகளை மேற்-கொள்கிறது. இந்நிறுவனத்துக்கு சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பெங்களூருவிலும் நிறுவனங்கள் உள்ளன. மின்சாரம், மின் அளவீடு கருவி, நீர் பாசனம், கட்டுமானம், சாலைகள், கடல் சார்பு துறைகளின கட்டு-மானங்களை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறு-வனம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கிடைத்த புகார் அடிப்ப-டையில், கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதி-காரிகள் கடந்த, 7ல் சோதனையில் ஈடுபட்டனர்.

இதே போல், ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பில் உள்ள ஆர்.பி.பி. கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுதவிர என்.ஆர். திருமண மண்டபம், நவநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமலிங்கத்தின் வீட்டிலும் சோதனை நடந்தது. மேலும், அம்மா-பேட்டை அருகே பூனாச்சியில் ராமலிங்கத்துக்கு சொந்தமான ஸ்பேக் ஸ்டார்ச் ப்ராடெக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திலும் (மரவள்ளி கிழங்கு அரவை ஆலை) வருமான வரித்துறை அதிகா-ரிகள் சோதனை செய்தனர்.இந்நிலையில் நேற்று இரண்டாம் நாளாக, சோதனை தொடர்ந்-தது. ராமலிங்கம் அ.தி.மு.க. பொதுச்செயலர் இ.பி.எஸ்.,ன் உற-வினராவார். ஸ்பேக் ஸ்டார்ச் ப்ராடெக்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், முதன்மை இயக்குதல் அதிகாரியாக, இ.பி.எஸ்., மகன் வெற்றிவேல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us