sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'ஏர்ஹாரன்' பயன்பாடு அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

/

'ஏர்ஹாரன்' பயன்பாடு அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

'ஏர்ஹாரன்' பயன்பாடு அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

'ஏர்ஹாரன்' பயன்பாடு அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்


ADDED : பிப் 10, 2025 07:14 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், ஜவுளி உற்பத்தி, பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரிப்பு என, பல தொழில்கள் சிறந்து விளங்குகின்றன. தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக கரூர் உள்ளதால், தினசரி ஏராளமான தனியார், அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. பெரும்பாலான தனியார் பஸ்கள், கார், பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள, 'ஏர்ஹாரன்' சாலைகளில் நடந்து செல்பவர்களை நடுங்க வைக்கின்றன.

மோட்டார் வாகன சட்டப்படி, ஒலி மாசு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஓட்டுனர்கள் ஏர்ஹாரன்களையே பயன் படுத்துகின்றனர். சராசரி மனிதனின் கேட்கும் திறன் ஒலி அளவு, 80 டெசிபல். பகல் நேரத்தில் ஒலியின் அளவு, 53 டெசிபலும், இரவில், 35 டெசிபலும் இருந்தாலே, போதுமானது.

மேலும், 90 டெசிபலுக்கு மேல் அதிக ஒலியை, ஒருவர் எட்டு மணி நேரத்திற்கு கேட்டால், அவருக்கு காது கேளாமை பாதிப்பு ஏற்படும். 115 டெசிபல் அளவு ஒலியை தொடர்ச்சியாக கேட்கும்போது, காது நரம்புகள் தளர்ச்சியடையும். காதுகளுக்கு மிக அருகே, திடீரென இத்தகைய ஹாரன்கள் அடிக்கப்படும் போது, காதுகளில் உள்ள ஜவ்வு கிழியும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஏர்ஹாரன்களை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us