/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வால்வில் வெளியேறும் குடிநீர் பைப் அமைக்க வலியுறுத்தல்
/
வால்வில் வெளியேறும் குடிநீர் பைப் அமைக்க வலியுறுத்தல்
வால்வில் வெளியேறும் குடிநீர் பைப் அமைக்க வலியுறுத்தல்
வால்வில் வெளியேறும் குடிநீர் பைப் அமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2025 01:36 AM
கரூர், நெரூர் அருகே குழாயில், அமைக்கப்பட்டுள்ள வால்வில் இருந்து, குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் பைப் அமைக்க வேண்டும்.
நெரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெரூர் அக்ரஹாரம் அருகே, குழாயில் அமைக்கப்பட்டுள்ள வால்வில் இருந்து, குடிநீர் வெளியேறி வருகிறது. இதை அப்பகுதி மக்கள், துணிகளை வைத்து வடிகட்டி பிடித்து செல்கின்றனர்.
சில நேரங்களில் வால்வில் இருந்து, விடிய விடிய குடிநீர் சாக்கடை கால்வாயில் செல்கிறது. இதனால், வால்வை சீரமைக்ககோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் பயனில்லை. எனவே, வால்வில் இருந்து வெளியேறும் குடிநீர் வீணாவதை தடுக்க, பைப் அமைத்தால், தண்ணீர் பிடிக்க வசதியாக இருக்கும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.