/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்
/
லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்
லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்
லட்சுமணம்பட்டி கிராமத்தில் நெல் நாற்று நடும் பணி தீவிரம்
ADDED : செப் 26, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லட்சுமணம்பட்டி கிராமத்தில்நெல் நாற்று நடும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், செப். 26-கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில், விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது கிணற்று நீர் பாசன முறையில், விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். முன்னதாக, வயல்களில் உழவு செய்யப்பட்டது. பின், உழவு வயல்கள் சமன்படுத்தப்பட்டு, விவசாய தொழிலாளர்களை கொண்டு நெல் நாற்றுகளை நடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணறுகளில் உள்ளதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.