/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு
/
ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு
ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு
ரூ.13 கோடியில் திட்டப்பணி 6 மாதங்களில் முடிக்க முடிவு
ADDED : அக் 12, 2025 03:05 AM
கரூர்: ''ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில், 13 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள், 6 மாதங்களில் முடிக்கப்படும்,'' என, கிராம சபை கூட்டத்தில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரி-வித்தார்.
கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்-கோவில் கிழக்கு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பேசியதாவது:
ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பஞ்சாயத்தில் மட்டும் நான்கரை ஆண்டுகளில், 17 கோடி ரூபாய் அளவிற்கான வளர்ச்சி திட்-டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தார் சாலை அமைத்தல், சிமென்ட் சாலை, வடிகால் வசதி, தெரு விளக்குகள் அமைத்தல், புதிய குடிநீர் திட்டப் பணிகள் என, 13 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்டப் பணிகளை கிராம சபையிலே தீர்மா-னமாக வைத்திருக்கிறோம். இந்த திட்டப் பணிகள், 6 மாதங்-களில் முடிக்கப்படும்.
மாவட்டத்திற்கு அரசு வேளாண் கல்லுாரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, புதிய பஸ் ஸ்டாண்ட், புகழூர் காமராஜ் மார்க்கெட் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்-டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 24 கோடி ரூபாய் கரூர்-ஈ-ரோடு சாலை விரிவாக்கத்திற்கு செய்யப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல் உள்-பட பலர் பங்கேற்றனர்.