sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி - வேலாயுதம்பாளையம் டவுன் பஸ் இன்றி மக்கள் அவதி

/

க.பரமத்தி - வேலாயுதம்பாளையம் டவுன் பஸ் இன்றி மக்கள் அவதி

க.பரமத்தி - வேலாயுதம்பாளையம் டவுன் பஸ் இன்றி மக்கள் அவதி

க.பரமத்தி - வேலாயுதம்பாளையம் டவுன் பஸ் இன்றி மக்கள் அவதி

1


ADDED : ஜூலை 10, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:57 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தியிலிருந்து, புன்னம் சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் வரை டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலாயுதம்பாளையம், சாலியபாளையம், ஆண்டி சங்கிலிபாளையம், காங்கேயம் பாளையம், பஞ்சையன்குட்டை, கரட்டுப்பாளையம், புதுார்பட்டி, புன்னம் சத்திரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

இப்பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள், க.பரமத்திக்கு வாரச்சந்தை மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்று வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. 2016ம் ஆண்டு பல்வேறு காரணங்களை காட்டி, பஸ் செல்வதை நிறுத்தி விட்டனர். பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளிடம், இப்பகுதி மக்கள் மனு அளித்தும் பலனில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி க.பரமத்தியிலிருந்து, புன்னம் சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் வரை டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us