sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் 3வது திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது

/

கரூரில் 3வது திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது

கரூரில் 3வது திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது

கரூரில் 3வது திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது


ADDED : டிச 26, 2024 03:11 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், கொசு வலை கம்பெனி ஊழியரை, மூன்றாவதாக திரு-மணம் செய்து ஏமாற்றிய, பெண்ணை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், புஞ்சை காளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்,30; கொசுவலை கம்பெனி ஊழியர். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா,36, என்ற பெண்ணுக்கும் கடந்த, 12ல், மண்மங்கலம் பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. இந்நிலையில், ரேணு-காவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர், கோவையை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன், திருமணம் நடந்துள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து ரேணுகாவிடம், ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரேணுகா, 20 லட்ச ரூபாய், 20 பவுன் தங்க நகை கேட்டு ரமேைஷ மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த ரமேஷ், கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையறிந்த ரேணுகா, நேற்று முன்தினம் இரவு வெளியூருக்கு தப்பி செல்ல, கரூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட போலீசார், ரேணுகாவை கைது செய்தனர். மேலும், ரமேஷ்-ரேணுகா திரும-ணத்துக்கு ஏற்பாடு செய்த, கோவையை சேர்ந்த புரோக்கர்கள் ஜெகநாதன், ரோஷினி, தேவக்கோட்டையை சேர்ந்த பழனிக்-குமார் ஆகிய மூன்று பேரை, மகளிர் போலீசார் தேடி வருகின்-றனர்.கல்யாணராணி ரேணுகாவுக்கு, முதல் கணவர் மெய்யர் மூலம், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேலும், ரேணுகாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், திருமணம் என்ற பெயரில், அப்பாவி ஆண்களை ஏமாற்றி பணம் பறிப்பதுதான் அவரது வேலை என, கரூர் மகளிர் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us