sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

/

மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

மாயனூர் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம்


ADDED : ஜன 07, 2024 11:05 AM

Google News

ADDED : ஜன 07, 2024 11:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்; முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம், மாயனுார், கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளி வளாகத்தில் நடந்தது.

அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 'நுாற்றாண்டு விழா நாயகர், முன்னாள் முதல்வர் கருணாநிதி சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது' என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்ம் நடத்தப்பட்டது. 69 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்ணுக்கு நீதி, தேசியக்கொடி ஏற்றுவதில் மாநில உரிமை கண்ட கருணாநிதி ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, சட்டசபை பேரவை கூடுதல் செயலர்கள் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ஜெய்கணேஷ், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, தனிதுணை ஆட்சியர் சைபுதீன், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், தலைமையாசிரியர்கள் விஜயலட்சுமி, ரத்தினம், கிருஷ்ணராயபுரம் தி.மு.க., நகர செயலர் சசிக்குமார், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us