sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

/

கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஆக 29, 2025 01:15 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மழை காலம் தொடங்கவுள்ள நிலையில், ராஜ வாய்க்காலை துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர், அமராவதி ஆற்றின் பிரதான ராஜவாய்க்கால் மூலம், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மழை இல்லை. விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால், வாய்க்கால் செல்லும் பாதையை துார்வாரினால் மழைநீர் வரும்போது, தடையில்லாமல் செல்ல முடியும். மேலும் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், முழுமையாக வாய்க்காலில் சென்று விவசாயத்திற்கு பயன்படும். இதை கருத்தில் கொண்டு விரைவில் துார்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், வெங்கமேடு பிரிவு, எல்.என்.எஸ். பிரிவு, ஈரோடு ரோடு, கார்னர் மற்றும் பஞ்சமாதேவி பகுதிகளில் பெரிய அளவில் வாய்க்கால் துார்வாராமல் புதர் மண்டிகிடக்கிறது. இதில், பிளாஸ்டிக் உள்பட குப்பை குவிந்து கிடக்கிறது. இதனை சரி செய்தால், மழை வருவதற்கு முன்பாக தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயல்படவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us