/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபைல் போன் திருடர்களின் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்ட்
/
மொபைல் போன் திருடர்களின் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்ட்
மொபைல் போன் திருடர்களின் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்ட்
மொபைல் போன் திருடர்களின் பிடியில் கரூர் பஸ் ஸ்டாண்ட்
ADDED : மார் 31, 2025 02:30 AM
கரூர்: தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடம், குண்டும், குழியுமான தரைத்த-ளங்கள், ஆக்கிரமிப்புகள் என, பல குறைபாடுகள் கரூர் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளன. மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கரூர் பஸ் ஸ்டாண்டில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களிடம் மொபைல் போன் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் திருச்சி, கோவை, ஈரோடு பகுதிகளுக்கு பள்ளி, கல்-லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் பஸ்சில் ஏறும்-போது, அவர்களை திசை திருப்பி பாக்கெட்டில் உள்ள மொபைல் போன்களை திருடிச்செல்லும் அவலம் நடந்து வருகி-றது.பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் இல்லை. காலை நேரங்-களில், போலீசார் பெரும்பாலும் ரோந்து பணியில் இருப்பது இல்லை. இதனால், மொபைல் போன் திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைத்து, நாள்தோறும் போலீசாரை, பணியில் நியமித்து, காலை நேரங்களில் கரூர் பஸ் ஸ்டாண்டில், ரோந்து பணியில் ஈடுபட வைப்பது அவசியம்.