/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செஸ் போட்டியில் கொங்கு வெள்ளாளர் பள்ளி சாதனை
/
செஸ் போட்டியில் கொங்கு வெள்ளாளர் பள்ளி சாதனை
ADDED : செப் 27, 2011 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கரூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவன் யுவன்பாரதி முதலிடமும், காளிதேவா இரண்டாமிடமும் பெற்றனர். பெண்கள் பிரிவில் ப்ளஸ்2 மாணவி சவுந்தர்யா முதலிடமும் பெற்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தினகர், ஷப்னம் பானு ஆகியோரும் வெற்றிப்பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, செயலாளர் மனோகரன், பொருளாளர் ஜெயபாலன், உபதலைவர் பெரியசாமி, இணைச்செயலாளர் வாசுதேவன், பள்ளி தாளாளர் கணபதி, கமிட்டி உறுப்பினர் விசா சண்முகம் ஆகியோர் பாராட்டினர்.