sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் கரூர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி

/

இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் கரூர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி

இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் கரூர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி

இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் கரூர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி


ADDED : மே 09, 2025 02:35 AM

Google News

ADDED : மே 09, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,

-இந்தியா - இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், கரூருக்கு பெரிய வாய்ப்பாக அமையும் என, கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:

இந்தியா - இங்கிலாந்து இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம், இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும், குறிப்பிட்ட சில பொருள்களுக்கு பூஜ்ய சதவீத இறக்குமதி வரி என்ற அடிப்படையில், வரி இல்லாமல் விற்பனைக்கு வரும். அந்த பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் விலையை விட, குறைவானதாக இருக்கும்.

இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இன்னும் மூன்று ஆண்டுகளில் இது இரு மடங்காக உயர வாய்ப்பு அதிகம். ஜவுளி தொழிலில், இந்தியாவுக்கு போட்டியாக இருக்கக்கூடிய பல நாடுகளின் இறக்குமதி வரி, இங்கிலாந்தில் இந்தியாவை விட குறைவாக இருந்தது.

இதன் காரணமாக, இந்திய ஜவுளி பொருள்களின் விலை, இங்கிலாந்தில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களை விட சிறிது அதிகமாகவே இருந்தது. தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஜவுளி பொருள்கள், இங்கிலாந்து சந்தையில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களின் விலையோடு போட்டியிட முடியும். இது, இந்திய ஜவுளி தொழிலுக்கு வளர்ச்சியை கொடுப்பதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கரூர் ஜவுளி ஏற்றுமதியில், இங்கிலாந்து ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், கரூர் ஜவுளி தொழில் வளர்ச்சி பாதையில் செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us