/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலைக்காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியின் அவலம்
/
தலைக்காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியின் அவலம்
தலைக்காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியின் அவலம்
தலைக்காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியின் அவலம்
ADDED : மே 05, 2025 02:09 AM
கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தலைக்காயம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லை என்பதால், நோயாளிகள், திருச்சி செல்லும் அவலம் தொடர்கிறது.
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தோல், இருதயம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரு-கின்றன. 880 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு தலைக்காயத்துக்கு, சிகிச்சையளிக்க டாக்டர் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.சாலை விபத்து, அடிதடி தகராறில் காயம் அடைவோர் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு சரா-சரியாக, 20 முதல், 30 பேர் விபத்து காய சிகிச்சைக்கு வருகின்-றனர். பெரும்பாலானோர் உயிருக்கு போராடும் நிலையிலே வரு-கின்றனர். இங்கு, தலைக்காயத்துக்கு சிகிச்சையளிக்க நரம்பியல் டாக்டர் நியமனம் செய்யப்படவில்லை. முதலுதவி சிகிச்சை மட்-டுமே அளிக்கப்படுகிறது. மேல்சிகிச்சைக்கு, திருச்சி அரசு மருத்-துவக் கல்லுாரி மருந்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்-றனர்.
கரூரில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்ஸ் செல்ல, 2 மணி நேர-மாகும். உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, உரிய நேரத்தில் திருச்சி கொண்டு செல்ல
முடியாமல் வழியில் உயிரிழப்பு சம்பவம் நடக்கிறது.
டாக்டர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாததால், பெரும்பாலான நோயாளிகள் பிற மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்-புவதும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறப்பதும் நடக்கிறது. இந்த மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தேவையான டாக்டர்களை நியமிக்க சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் லோகநாயகி கூறுகையில், ''தலை காயத்துக்கு சிகிச்சைய-ளிக்கும் நரம்பியல் டாக்டர்,- நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (எம்.டி) ஆகிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. டாக்டர்களை நியமனம் செய்ய, தமிழக அரசிடம் கேட்டிருக்-கிறோம். தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளி-களை, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டி
உள்ளது,'' என்றார்.