sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?

/

பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?

பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?

பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?


ADDED : ஆக 29, 2011 11:59 PM

Google News

ADDED : ஆக 29, 2011 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நகராட்சிக் கூட்டம் இன்று (30 ம் தேதி) பழைய கூட்ட அரங்கில் (பெத்தாச்சி மண்டப்பத்தில்) நடப்பதாக தீர்மான நகல்கள் கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'கடந்த கூட்டத்தின் போது புதிய கட்டிடத்தில் கூட்டம் நடத்த வேண்டும்' என போராட்டம் நடத்திய தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் இன்றும் போராட்டம் நடத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரூர் நகராட்சி கூட்டம் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் நடந்து வருகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, ஒரு கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம், கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டது.



அந்த கட்டிடத்தை அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு குளித்தலையில் நடந்த அரசு விழாவில் திறந்து வைத்தார். இதையடுத்து 'புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடக்கும்' என கவுன்சிலர்கள் எதிர்பார்த்தனர். பணிகள் பாக்கியுள்ளதாக கூறி பழைய கட்டிடத்திலேயே நகராட்சி கூட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் சுமார் இரண்டு மாத காலமாக புதிய நகராட்சி கட்டிடம் திறந்து விடப்படவில்லை. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு, தி.மு.க., வை சேர்ந்த நகராட்சி தலைவர் சிவகாம சுந்தரி உள்ளிட்ட கவுன்சிலர்கள், புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடத்த வசதியாக, பூட்டப்பட்ட கட்டிடத்தை திறக்க வேண்டும்' என மாவட்ட கலெக்டர் ÷ஷாபனாவிடம் மனு கொடுத்தனர். ஆனால் புதிய கட்டிடம் திறந்தபாடில்லை.



கடந்த ஜூன் மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில், 'அடுத்த மாதம் புதிய கட்டிடத்தில் கூட்டம் நடக்கும்' என நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி தெரிவித்தார். இதையடுத்து பழைய கட்டிடத்தில் உள்ள நகராட்சி அரங்கில் தற்போதைய கவுன்சிலர்கள் குரூப் ஃபோட்டோ எடுத்து கொண்டனர். ஆனால், கடந்த மாதமும் பழைய கட்டிடத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அதைக் கண்டித்து தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி, 'புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில், ஈடுப்பட்ட தி.மு.க., காங்., கவுன்சிலர்களை நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி நேரில் சென்று சமாதானம் பேசி அழைத்தார். அதனால் மீண்டும் தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 'எப்போது புதிய கட்டிடம் திறக்கப்படும்' என தி.மு.க., கவுன்சிலர்களின் கேள்விக்கு, '20 நாட்களில் புதிய கட்டிடத்தில் உள்ள வேலைகள் முடிக்கப்பட்டு, அதன் பிறகு கட்டிடம் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும்' என அதிகாரிகள் பதில் தெரிவித்தனர். ஆனால், இன்று நடைபெறவுள்ள நகராட்சி கூட்டமும் பழைய கட்டிடத்தில் நடக்க உள்ளதாக கவுன்சிலர்களுக்கு தீர்மா ன நகல்கள் அனுப்பபட்டுள்ளது. இதனால் இன்று நடக்கவுள்ள கரூர் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்கள், புதிய கட்டிடத்தை திறக்ககோரி அனல் பறக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று நடைபெறவுள்ள கரூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.








      Dinamalar
      Follow us