sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கூடைப்பந்து இறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணி வெற்றி

/

கூடைப்பந்து இறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணி வெற்றி

கூடைப்பந்து இறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணி வெற்றி

கூடைப்பந்து இறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணி வெற்றி


ADDED : பிப் 13, 2024 12:13 PM

Google News

ADDED : பிப் 13, 2024 12:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் நடந்த, அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து இறுதி போட்டியில், கேரளா மின் வாரிய அணி வெற்றி பெற்றது.

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் கடந்த, 9 ல் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் இரவு இறுதி போட்டி நடந்தது. அதில், கேரளா மின் வாரிய அணியும், கிழக்கு ரயில்வே அணியும் மோதின. அதில், கேரளா மின் வாரிய அணி, 86-59 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாமிடத்தை சதர்ன் ரயில்வே அணியும், நான்காம் இடத்தை சென்னை ரைசிங் ஸ்டார் அணியும் பிடித்தது.

முதலிடம் பிடித்த கேரளா மின் வாரிய அணிக்கு பரிசாக, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். இரண்டாமிடம் பெற்ற அணிக்கு, 40 ஆயிரம் ரூபாய், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு, 30 ஆயிரம் ரூபாய், நான்காமிடம் பிடித்த அணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், எம்.பி., ஜோதிமணி, கூடைப் பந்து கழக சேர்மன் தனபதி, மாவட்ட தலைவர் கார்த்தி, துணைத்தலைவர்கள் முருகன், குழந்தைவேல், செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us