/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் ரூ.1.76 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை இலக்கு
/
கரூர் மாவட்டத்தில் ரூ.1.76 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை இலக்கு
கரூர் மாவட்டத்தில் ரூ.1.76 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை இலக்கு
கரூர் மாவட்டத்தில் ரூ.1.76 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை இலக்கு
ADDED : அக் 03, 2024 07:25 AM
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 1.76 கோடி ரூபாய் மதிப்-புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கதர் அங்-காடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தீபா-வளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்த பின், பேசியதாவது:
கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையின் போது, 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கதர் ரகங்-களை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 1.76 கோடி ரூபாய் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு சுதர் கிராம தொழில் வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் வகையில், அனைத்து அரசு- அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணி-யாளர்களுக்கு எளிய கடன் வசதிகள் செய்யப்பட்-டுள்ளன. கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்-களுக்கு, 30 சதவீதம் சில பட்டு ரகங்களுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.தேன், குளியல் சோப்பு பற்றும் சலவை சோப்பு, ஊதுவர்த்தி, சாம்பிராணி, மெழுகுவர்த்தி, ஜவ்-வாது, வலி நிவாரணி தைலம் மற்றும் ஷாம்பு பனை பொருட்கள் உள்ளிட்ட பல்வகையான கிராம பொருட்கள் கதரங்காடியில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் காதி கிராப்ட் பொருட்களை, https://tnkvib.org/ என்ற ஆன்லைன் மூலமும் வாங்கலாம்.இவ்வாறு பேசினார்.விழாவில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் உதவி இயக்குனர் சீனுவாசன், கதரங்-காடி மேலாளர் முத்துசாமி உள்பட பலர் பங்-கேற்றனர்.