sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கடத்தப்பட்ட பெண் மீட்பு

/

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கடத்தப்பட்ட பெண் மீட்பு

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கடத்தப்பட்ட பெண் மீட்பு

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கடத்தப்பட்ட பெண் மீட்பு


ADDED : ஜூன் 10, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி லோகூர் மேல் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் ஞானசேகரன், 31. இவர் சேலம், மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பஸ் டிரைவராக பணிபுரிகிறார். அதே கல்லுாரியில், ஓமலுார் மாட்டுகாரனுாரை சேர்ந்த திவ்யா, 21, என்பவர் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்தார்.

பஸ்சில் மாணவி வந்த போது, டிரைவர் ஞானசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த, 6ல், இருவரும் ஞானசேகரன் பெற்றோர் முன்னிலையில், அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 7ம் தேதி இருவரும், மாலையில் வலசையூரில் உள்ள ஞானசேகரன் சகோதரி வீட்டிற்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றனர். மாமாங்கம் பகுதி

யில் வந்தபோது, பின்னால் மூன்று கார்களில் வந்த பெண் உறவினர்கள், ஞானசேகரனை தாக்கி விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் திவ்யாவை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

மயக்க நிலையில் இருந்த ஞானசேகரன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் கொடுத்த புகாரில், 'தன்னை தாக்கி விட்டு, கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்றதோடு, என் மனைவியையும் கடத்தி சென்றனர்,' என தெரிவித்து இருந்தார்.

கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி, உறவினர்களிடம் இருந்து கடத்திய திவ்யாவை மீட்டனர், இதையடுத்து திவ்யா மற்றும் அவரது உறவினர்கள், ஞானசேகரன் ஆகியோரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், திவ்யா கணவருடன் தான் செல்வதாக தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார், ஞானசேகரனுடன் திவ்யாவை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us