/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை மேலும் இருவர் மீது குண்டாஸ்
/
பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை மேலும் இருவர் மீது குண்டாஸ்
பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை மேலும் இருவர் மீது குண்டாஸ்
பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை மேலும் இருவர் மீது குண்டாஸ்
ADDED : பிப் 17, 2024 01:49 PM
கரூர்: அரவக்குறிச்சி அருகே, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மேலும், இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்த ராதிகா, 37, என்பவரிடம் ஒன்பதரை பவுன் தங்க செயினை பறித்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி பக்ருதீன், 30; அஸ்வந்த், 30; பாண்டியன், 30, கண்ணன், 23; ராஜேஷ், 44; ஆகிய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதில், பக்ருதீன், அஸ்வந்த் ஆகிய இரண்டு பேர் கடந்த, 16ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட பாண்டியன், கண்ணன் ஆகிய, இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, எஸ்.பி., பிரபாகர், கலெக்டர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கலெக்டர் உத்தரவு படி, பாண்டியன், கண்ணன் ஆகிய இரண்டு பேரை, குண்டர் சட்டத்தின் கீழ், அரவக்குறிச்சி போலீசார் நேற்று கைது செய்தனர். அதற்கான நகல், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு பேரிடம் வழங்கப்பட்டது.