sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேல வாளியாம்பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

/

மேல வாளியாம்பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

மேல வாளியாம்பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

மேல வாளியாம்பட்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா


ADDED : ஜூன் 12, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, ராசாண்டார் திருமலை பஞ்., மேல வாளியாம்பட்டியில் செல்வ விநாயகர், பொம்மக்காள், முத்தாளம்மன், சக்கம்மாள், மால்லக்கம்மாள் கோவில்கள் அமைந்துள்ளன.

இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து, காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, யாக வேள்வி பூஜைகளை நடத்தினர்.

நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனிதநீர் கும்பத்தை ஊர் நாயக்கர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில், வேத மந்திரங்கள் முழங்க, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 2,000க்கும் மேற்பட்ட மக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள், ஆன்மிக பிரமுகர்கள், அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us