/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது 'குண்டாஸ்'
/
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது 'குண்டாஸ்'
ADDED : அக் 14, 2024 05:16 AM
கரூர்: கரூர் மாவட்டம், புலியூர் எஸ்.வெள்ளாப்பட்டியை சேர்ந்த பிச்சை மனைவி முத்தாயி, 56; இவர் கடந்த ஆக., 12ல் வெள்ளி-யணை அருகே, சின்னமநாயக்கன்பட்டி பகுதியில், கொலை செய்-யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, வெள்ளியணை போலீசார், குளித்தலை சுக்காம்பட்டியை சேர்ந்த பழனிவேலு, 37, என்ப-வரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், பழனிவேலுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் தங்கவேல், குண்டர் சட்-டத்தில் பழனிவேலுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான நகலை, வெள்ளியணை போலீசார் திருச்சி மத்திய சிறையில் உள்ள பழனிவேலுவிடம் வழங்கினர்.