ADDED : ஆக 21, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த பொய்யாமணி பஞ்., திருச்சாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்
மலையாளம், 57. விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 16 இரவு 10:00
மணியளவில் துாங்கிக் கொண்டிருந்த போது, சிறுநீர் கழிக்க எழுந்தார்.
அப்போது தவறி கீழே விழுந்துள்ளார். உடலில் காயம் ஏதும் இல்லாதததால்
வீட்டிலேயே இருந்து விட்டார்.
பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு, 18ம்
தேதி மாலை 6:00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமனையில்
அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இதுகுறித்து
அவரது மனைவி ஸ்ரீதேவி, 47, கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
