/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை சாலையில் விளக்குகள் தேவை
/
வெள்ளியணை சாலையில் விளக்குகள் தேவை
ADDED : நவ 30, 2024 01:02 AM
வெள்ளியணை சாலையில் விளக்குகள் தேவை
கரூர், நவ. 30-
கரூர்-வெள்ளியணை விரிவாக்க சாலையில், விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-வெள்ளியணை சாலை, மணவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ், லாரி வாகனங்கள் செல்கின்றன. இதனால், கரூர்-வெள்ளியணை சாலையில், வெங்ககல்பட்டியில் இருந்து, வெள்ளியணை வரை சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கியது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால், கரூர்- வெள்ளியணை சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, புதிய கரூர்-வெள்ளியணை, விரிவாக்க சாலையில், மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.