/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'இ-பைலிங்' நடைமுறை வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
'இ-பைலிங்' நடைமுறை வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 04:54 AM

குளித்தலை: குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல் சங்கத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக, 8 முதல், 12 வரை, குளித்தலையில் உள்ள அனைத்து நீதி-மன்றங்களும் பணியில் இருந்து விலகி இருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று காலை, 11:00 மணியளவில், வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்றத்திற்கு வெளியே, 'இ-பைலிங்' நடைமுறைகளை உடன-டியாக நிறுத்தி வைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். சங்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல்கள் முன்-னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
* கரூர் வக்கீல் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், செயலாளர் நகுல்சாமி தலை-மையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் மாவட்ட அளவி-லான விசாரணை நீதிமன்றங்களில், கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காத நிலையில், இ-பைலிங் நடைமு-றையை நிறுத்தி வைக்கவேண்டும்; பிசிகல் பைலிங் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்; வக்கீல்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

