sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோடை மழையால் எலுமிச்சை விலை குறைவு

/

கோடை மழையால் எலுமிச்சை விலை குறைவு

கோடை மழையால் எலுமிச்சை விலை குறைவு

கோடை மழையால் எலுமிச்சை விலை குறைவு


ADDED : ஏப் 21, 2025 08:16 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கோடை மழை காரணமாக, வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை விலை குறைந்தது.

கடந்த மார்ச் மற்றும் நடப்பு மாத துவக்கத்தில் கோடைகாலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் எலுமிச்சை, ஒரு கிலோ, 140 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், நடப்பு மாதம், சில நாட்களாக மாநிலம் முழுவதும் கோடை மழை பெய்ய துவங்கியது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை பழம் உற்பத்தி அதிகரித்தது.

இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜர் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று ஒரு கிலோ எலுமிச்சை, 125 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்றது.

இதுகுறித்து, எலுமிச்சை வியாபாரிகள் கூறுகையில், 'திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் இருந்து, எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கோடை மழைக்காலம் துவங்கியுள்ளதால் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், எலுமிச்சை பழத்தின் விலையும் குறைந்து வருகிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us