/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 12, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி தலைமையாசிரியர் விஜயன் தலைமையில் நடந்தது.
அதில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் பற்றியும், அதன் அறிகுறிகள் பற்றியும், களப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கோரியும் வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் விளக்கம் அளித்து பேசினார்.
நிகழ்ச்சியில், சுகாதார நிலைய டாக்டர் சத்யேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சந்தோஷ், கார்த்திக், ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

