/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
ADDED : ஜன 26, 2026 07:06 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை, பல பகுதிகளில் மழை பெய்தது.தஞ்சாவூர் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் கடந்த, 22 முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறி-வித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விட்டு விட்டு குளிர்ந்த காற்-றுடன் மழை பெய்தது. பிறகு, வானம் மேகமூட்ட-மாக காணப்பட்டது. மேலும், அவ்வப்போது கரூர் நகர பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6,819 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 6,399 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்-காலில், 420 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.75 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், 63 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

