/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரிக்கவுண்டன்பாளையம் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு தேவை
/
மாரிக்கவுண்டன்பாளையம் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு தேவை
மாரிக்கவுண்டன்பாளையம் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு தேவை
மாரிக்கவுண்டன்பாளையம் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு தேவை
ADDED : அக் 29, 2025 01:20 AM
கரூர், கரூர் அருகே ரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
கரூர்-சேலம் இடையே, புதிய ரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம்-வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் வழியாக வேலாயுதம் பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதி
களை சேர்ந்தவர்கள், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும், மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல சிரமப்
படுகின்றனர். எனவே, மாரிக்கவுண்டன் பாளையம் ரயில்வே பாலத்தில், மின் விளக்கு
கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

