/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது
/
அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது
ADDED : செப் 02, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி போலீசார் ஆண்டிப்பட்டிக்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே, சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது.
மது விற்பனையில் ஈடுபட்ட பள்ளப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்த கோட்டையன் என்பவரது மகன் மணிகண்டன், 31, என்பவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.