ADDED : செப் 14, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாலப்பட்டி பகுதியில் வெளிமாநில லாட்-டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, எஸ்.ஐ., சீனிவாசன் தலை-மையில் போலீசார், பாலப்பட்டி பகுதியில் கண்காணிப்பில் ஈடு-பட்டனர்.
அப்போது, ஒரு பேக்கரி
அருகே தமிழக அரசால் தடை செய்யப்-பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லாட்டரி ஏஜன்டான மாப்-பிள்ளை மீரா, 67, என்பவரை கைது செய்து, லாட்டரி டிக்கெட்டு-களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் அளித்த தகவல்படி லாட்டரி சீட்டு கடை உரிமையாளர்களை, ப.வேலுார் போலீசார் தேடி வருகின்றனர்.