/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து
/
மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து
ADDED : ஜன 13, 2025 03:33 AM
கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்-ணீரின் அளவு வினாடிக்கு, 5,000 கன அடியாக குறைக்கப்பட்-டுள்ளது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து, படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்-தினம், மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 8,992 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினா-டிக்கு, 5,359 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 4,509 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்-பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நில-வரப்படி தண்ணீர் வரத்து, 173 கன அடியாக இருந்தது. அமரா-வதி ஆற்றில் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 86.82 அடியாக இருந்தது. ஆத்துப்பாளையம் அணை: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.58 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு,
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

