/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காத்தவராயன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
/
காத்தவராயன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜன 27, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தல: குளித்தலை அடுத்த இரணியமங்கலம் பஞ்., வளையப்பட்டியில் காத்தவராயன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனர-மைப்பு செய்து, கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்
. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்-குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று  அதிகாலை, மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின், பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

