/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
/
மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED : நவ 04, 2024 05:09 AM
குளித்தலை: குளித்தலை முத்துபூபால சமுத்திரம், மகா மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவில், சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை, அன்னதானம் நடந்தது.
குளித்தலை முத்துபூபால சமுத்திரம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, 48வது நாளாக மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்தது. மகா மாரி-யம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, தினந்-தோறும் மண்டல பூஜை, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் தொடர்ந்து நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழா-வையொட்டி, கடம்பவனேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் அம்பாளுக்கு, 108 கலச பூஜை, யாக பூஜையும்; மதியம், 1:30 மணிக்கு, 108 கலச அபிஷேகம், அம்பாளுக்கு அலங்காரம், மகா தீபாராதனையும்; சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மண்-டல பூஜை நிறைவு விழாவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கலந்து கொண்டனர்.