/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் உடல்
/
கரூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் உடல்
ADDED : ஜூன் 01, 2025 01:28 AM
கரூர், கரூர் அருகே, ரயில் மோதி இறந்தவர் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் - திண்டுக்கல் ரயில்வே இருப்பு பாதையில், தான்தோன்றிமலை பகுதியில், நேற்று காலை, 55 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரத்தக் காயங்களுடன் கிடந்தது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இறந்தவர் என தெரியவந்தது. இறந்தவர் சட்டை காலரில் டினாஷ், வெங்கமேடு, கரூர் என துணியால் பிரின்ட் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, கரூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இவரது சடலம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.