தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : ஆக 05, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்:திருச்சி மாவட்டம், வீரகலுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரட்ரிக் அருள் மகன் பாக்கியசீலன், 32; ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள்.

இவரது குடும்பத்தினர், கடந்த, 1ல், கொல்லிமலையில் உள்ள மாசி பெரியசாமி கோவிலுக்கு கிடா வெட்டி பூஜை செய்ய சென்றனர். மறுநாள் மாலை, 4:00 மணிக்கு, 'ராயல் என்பீல்டு' வண்டியில், பாக்கியசீலன் கடைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், பாக்கிய சீலனுக்கு தலையில் அடிபட்டது. அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். வாழவந்திநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us