ADDED : செப் 29, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், 36; கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு போடிநாய்க்கன்பட்டியில் உள்ள சாக்கடை கால்வாய் திண்டில் துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது, சிவக்குமார் எதிர்பாராத விதமாக, 10 அடி ஆழத்தில் உள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.