/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 07, 2025 04:01 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிழக்கு தெருவில் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை-யொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு, மருதுார் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின், அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை
நடந்தது.
இரவு கல்லுப்பாலத்தில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், மருதுார் தேவேந்திர தெருவில் அமைந்துள்ள மாரி-யம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ராஜேந்திரம் பஞ்., பட்டவர்த்தி கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் தண்ணீர்-பள்ளி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜை
நடந்தது.