/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தவர் மாயம்; மனைவி புகார்
/
சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தவர் மாயம்; மனைவி புகார்
சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தவர் மாயம்; மனைவி புகார்
சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்தவர் மாயம்; மனைவி புகார்
ADDED : நவ 10, 2024 01:24 AM
சிட்பண்ட் நிறுவனம் நடத்தி
வந்தவர் மாயம்; மனைவி புகார்
குளித்தலை, நவ. 10-
குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., இருபுத்திபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபா, 26. இவரது கணவர் வினோத், 29. இவர், வடசேரி முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து, தோகைமலையில் பழனி ஸ்ரீ முருகா என்ற சிட்பண்ட் மற்றும் பர்னிச்சர் கடையில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிலையில், முருகானந்தம் இவரிடம் இருந்து பிரிந்து நின்று விட்டதால், சிட்பண்ட் நடத்த முடியாத நிலையில் வினோத் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
கடந்த, 4 மதியம் 1:00 மணியளவில், கோவை சென்று சிட்பண்ட் கம்பெனியின் சேர்மன் கார்த்திக்கிடம் இருந்து, பணம் வாங்கி வருகிறேன் என்று கூறிச் சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
தனது கணவரை காணவில்லை என, மனைவி பிரபா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்த வினோத்தை தேடி வருகின்றனர்.