/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு
/
மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு
ADDED : ஏப் 20, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:
குளித்தலை அடுத்த பாதிரிபட்டி பஞ்., பாதிரிபட்டி கடைவீதியில், 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிவதாக, தோகைமலை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவல்படி, சாந்திவனம் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் மருதாம்பாள் மற்றும் டிரைவர் அருள்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், பாதிரிபட்டி பகுதிக்கு சென்றனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, திருச்சி தில்லை நகரிலுள்ள, 'ஆத்மா' மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.