ADDED : ஆக 20, 2025 01:59 AM
குளித்தலை, கரூர் வெங்கமேடு, குளத்துப்பாளையம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஒரு மாதத்திற்கு மேலாக தனக்குத் தானே பேசியபடியும், கிழிந்த ஆடைகளுடனும் சுற்றித்திரிந்து வந்தார்.
இதையடுத்து, கருர் அன்பே சிவம் அறக்கட்டளை நிர்வாகி பாக்கியராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட மனநல திட்ட டாக்டர் பாரதிகார்த்திகா ஆகியோர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்டு, சாந்திவனத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமென, இயக்குனர் அரசப்பனிடம் கேட்டு கொண்டனர். அதன்படி, சாந்திவனம் மனநல காப்பக நிர்வாக செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் அனுமதியுடன், நேற்று முன்தினம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், மனநல சமூக பணியாளர் யுவலட்சுமி, செவிலியர் மருதாம்பாள் மற்றும் ஓட்டுனர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு, திருச்சி தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.