sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.1.36 கோடியில் அசலதீபேஸ்வரர் கோவில் திருப்பணி ஆய்வுக்கு பின் பணி துவங்க அமைச்சர் சேகர்பாபு அனுமதி

/

ரூ.1.36 கோடியில் அசலதீபேஸ்வரர் கோவில் திருப்பணி ஆய்வுக்கு பின் பணி துவங்க அமைச்சர் சேகர்பாபு அனுமதி

ரூ.1.36 கோடியில் அசலதீபேஸ்வரர் கோவில் திருப்பணி ஆய்வுக்கு பின் பணி துவங்க அமைச்சர் சேகர்பாபு அனுமதி

ரூ.1.36 கோடியில் அசலதீபேஸ்வரர் கோவில் திருப்பணி ஆய்வுக்கு பின் பணி துவங்க அமைச்சர் சேகர்பாபு அனுமதி


ADDED : பிப் 03, 2025 08:36 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 1.36 கோடி ரூபாய் மதிப்பில், கும்பாபி-ஷேக திருப்பணியை துவங்க அனுமதி அளித்தார்.

மோகனுாரில் பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்-வரர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி மதுகர-வேணி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஏற்றப்பட்டுள்ள தீபம், எவ்வளவு காற்றடித்தாலும் அணையாத தீபமாக சுடர்விட்டு எரிவதால், சுவாமிக்கு அசலதீபேஸ்-வரர் என்ற பெயர் உள்ளது. இக்கோவில் வைப்-புத்தலமாக விளங்குகிறது.இக்கோவில், 2008ல் கும்பாபிஷேகம் செய்யப்-பட்டது. அதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை, 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், உபயதாரர்கள் பங்களிப்-பாக, 47.50 லட்சம் ரூபாய் என, மொத்தம், ஒரு கோடியே, 36 லட்சத்து, 50,000 ரூபாய் செலவில், கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக ஹிந்து சமய அறநிலை-யத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று, அசலதீ-பேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்-கொண்டார். சுவாமியை வழிபட்ட அவர், கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்-போது, 'கோவில் கும்பாபிஷேக திருப்பணியை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும் என கேட்-டுக்கொண்டார்.

தொடர்ந்து, கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமியை வழி-பட்டார். கலெக்டர் உமா, எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மோகனுார் கிழக்கு ஒன்-றிய தி.மு.க., செயலாளர் நவலடி, மோகனுார் டவுன் பஞ்., செயலாளர் செல்லவேல், டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவ-ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us