/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராமம் தோறும் மனு பெறும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பங்கேற்பு
/
கிராமம் தோறும் மனு பெறும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பங்கேற்பு
கிராமம் தோறும் மனு பெறும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பங்கேற்பு
கிராமம் தோறும் மனு பெறும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பங்கேற்பு
ADDED : ஜன 05, 2026 07:38 AM

கரூர்: -கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புஞ்சை கடம்பங்குறிச்சி மேட்டுப்பாளையத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.
இங்கு, கல்வி, மருத்துவம், உதவித்-தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மக்கள் மனுக்களை அளித்தனர். மேலும், அடிப்-படை வசதிகளான குடிநீர், சாக்கடை, சாலை வசதி உள்ளிட்டவை குறித்தும் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற அவர், 'கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறு-தியளித்தார்.
தொடர்ந்து, தி.மு.க., அரசின் ஐந்-தாண்டு சாதனைகளை எடுத்துக்கூறினார்.இதையடுத்து, ஓட்டக்களம், கடம்பங்குறிச்சி அக்-ரஹாரம், கடம்பங்குறிச்சி ஏ.டி., தெரு, பொன்னி நகர், கோரைக்காடு, சின்ன வரப்பாளையம், பெரிய வரப்பாளையம், பால்வார்பட்டி, பண்டுத-காரன்புதுார், நன்னியூர், செவந்திபாளையம், பாரதி நகர், கோவில்பாளையம், என்.குளத்துார், கோட்டைமேடு ஏ.டி.,தெரு., வாங்கல் கோட்டை மேடு உள்பட, 21 இடங்களில் மனுக்களை பெற்றார். கரூர் வடக்கு ஒன்றிய செயலர் வேலுசாமி உள்பட பலர் பங்-கேற்றனர்.

