அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகு-திகளில், கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நி-லையில் பொதுமக்களை நோயில் இருந்து பாது-காக்கும் பொருட்டு, பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவ-டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில், கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முதிர் கொசு அழிப்பு பணியை தீவிரப்படுத்தி பொது மக்களிடையே துாய்மை பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்ப-டுத்தி வருகின்றனர்.
சூதாடிய 3 பேர் கைது
கரூர், ஆக. 11
கரூர் அருகே, பணம் வைத்து சூதாடிய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்-ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக ரவிச்சந்திரன், 36, அறிவ-ழகன், 40, சிவா, 30, ஆகிய, மூன்று பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.