ADDED : மே 30, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை :குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி, 40, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் ரோஜா, 20, தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த, 19, காலை 10:00 மணியளவில் அய்யம்பாளையம் கோவில் திருவிழாவுக்கு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.