ADDED : மே 30, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலைகுளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி, 40, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் ரோஜா, 20, தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த, 19, காலை 10:00 மணியளவில் அய்யம்பாளையம் கோவில் திருவிழாவுக்கு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.