/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூடுதல் விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
/
கூடுதல் விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
கூடுதல் விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
கூடுதல் விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
ADDED : ஏப் 19, 2024 02:07 AM
அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில்
இருந்து தென்னிலை செல்லும் சாலை 15 கி.மீ., துாரம் கொண்டது.
இதே போல
சின்னதாராபுரத்தில் இருந்து, க.பரமத்தி செல்லும் சாலை, 17 கி.மீ.,
துாரம் உடையது. இரண்டு சாலைகளிலும், ஒன்றிரண்டு தெருவிளக்குகளே
உள்ளதால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்
பயத்துடன் செல்கின்றனர். தெருவிளக்குகள் இல்லாததால், இரவு
நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து
விபத்து ஏற்பட்டு வருகிறது. இச்சாலைகளில், ஒன்றிரண்டு தெரு
விளக்குகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

